வைரஸின் தன்மை பல்வேறு பெயர்களில் உருமாறி வருகிறது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

. நீட் தேர்வு குறித்து ஏகே.ராஜன் தலைமையிலான குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், .அதன் பிறகுதான் நீட் தேர்வு குறித்து பேச முடியும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Update: 2021-07-09 10:43 GMT

வைரஸின் தன்மை பல்வேறு பெயர்களில் உருமாறி வருவதால் அதன் பாதிப்பு   யாருக்கும் புரியவில்லை என்றார்  என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மருத்துவர்கள் மற்றும் வருவாய்த் துறையினரிடம் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு கூறினார்.ஜிகா வைரஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி கர்பிணி பெண் தற்போது மகப்பேறு முடிந்து குணமடைந்து நல்ல நிலையில் உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.  ஜிகா வைரஸின் தன்மை குறித்து பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட் டுவருவதால், மக்கள் ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில், 10,839 ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களையும் மேம்படுத்த 15வது நிதிக்குழுவில் இருந்து 4619 கோடி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு குறித்து ஏகே.ராஜன் தலைமையிலான குழு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், .அதன் பிறகுதான் நீட் தேர்வு குறித்து பேச முடியும்.அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும்,அது தமிழக மக்கள் வியக்கும் வகையில் இருக்கும் என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

Tags:    

Similar News