சிவகங்கையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்

சிவகங்கையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-09 10:45 GMT

சிவகங்கையில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய வீதிகளானன காந்தி வீதியில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கூறி இருவர் மீது அதிவேகம், லைசன்ஸ் இல்லாதது, முகக்கவசம் அணியாதது, உரிய ஆவணங்கள் காண்பிக்காதது என பல்வேறு பல்வேறு பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தை சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது மேலும் இதுபோன்று பைக் ரேஸ் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகர போக்குவரத்து துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News