தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம் பேட்டி

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்

Update: 2021-09-12 11:09 GMT

எம்பி காரத்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை  சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடமும் பொதுமக்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார் அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில்,

தமிழகத்திற்கு தற்போது நடைபெறும் நீட் தேர்வு தேவையில்லை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்க்கு அடிப்படையில் மருத்துவக் கல்லூரியை இட ஒதுக்கீடுகளை நிரப்பலாம் மாணவர்களுக்கு தேர்வு மூலம் மேலும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் இந்த சூழ்நிலை அமைந்து உள்ளது இதனை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் சட்டசபையில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென தீர்மானம் இயற்றியது அது தமிழ்நாட்டு மக்களின் நிலைபாட்டை எடுத்து கூறுவதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்

Tags:    

Similar News