பிரிவு உபசரிப்பு விழா

திருப்புத்தூர் ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை பயிற்சி மையத்தில் மாணவ, மாணவியருக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

Update: 2021-03-21 04:44 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ முத்தையா நினைவு அறக்கட்டளை டி.டி.யூ, ஜி.கே.ஒய் பயிற்சி மையத்தில் மூன்றாவது பகுதி மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் காசிநாதன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருப்புத்தூர் நேஷனல் சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர், நிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டு, பயிற்சி நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேஷன் சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர்கள் உமர் பாரூக், பொன்முத்து, விமல் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாணவி கல்யாணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News