பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள்

சிவகங்கை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல், பேருந்துகளில் முந்திக்கொண்டு ஏறும் பொதுமக்கள், கொரானா தொற்று பரவும் அபாயம்

Update: 2021-04-26 13:13 GMT

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில், சிவகங்கை பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகம் காணபட்டது. பொதுமக்கள் பேருந்துகளில் முண்டி அடித்து ஏறுவதை தவிர்க்க வேண்டும் இல்லையென்றால் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது எனவே இடைவெளி விட்டு ஏறி தனி தனியாக முறையாக மாஸ்க் அணிந்து இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News