பிரதமருக்கு தனிகாவல்படை அதிகாரிகள்தான் பாதுகாப்பு அளிக்கின்றனர்: காங்கிரஸ் எம்பி

உலகிலுள்ள அனைத்து சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரசாரம் செய்வது வாடிக்கையானதுதான்

Update: 2022-01-08 15:45 GMT

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக்ப. சிதம்பரம்

பிரதமர் பாதுகாப்புக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் தனி காவல்படை அதிகாரிகள்தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.அவர்களுக்கு அது மட்டுமே பணியாக இருந்து வருகிறது என்றார் சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக் ப. சிதம்பரம்.

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ப. சிதம்பரம்  மேலும் கூறியதாவது:பஞ்சாப் சென்ற பிரதமருக்கு சில அசெளகரியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக உயிருக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்புடையது அல்ல.உலகிலுள்ள அனைத்து சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரசாரம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான். ஊரடங்கை உடனடியாக செயல்படுத்தாமல் படிப்படியாக செயல்படுத்துவது சரியான அணுகுமுறை. பொங்கலுக்கு நகர் புறங்களில் இருந்து. கிராமத்திற்கு வருபவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது . பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார் கார்த்திக் ஹ.சிதம்பரம்.


Tags:    

Similar News