தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஆசிரியை உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சை தான் காரணம் என கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு

Update: 2021-09-21 18:05 GMT

சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது இறந்த ஆசிரியையின்  உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகைப்போராட்டம் நடத்தினர்.

சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே உள்ள கோமாளிபட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பாரதி பணியாற்றி வருகிறார். இவர் இரண்டாவது பிரசவத்திற்காக சிவகங்கை தெப்பக்குளம் அருகே இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி ஆசிரியை பாரதி உயிரிழந்தார். ஆசிரியை பாரதியின் உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் தவறான சிகிச்சை தான் காரணம் என கூறி உறவினர்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News