சிவகங்கையில் திடீர் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கோடையை காட்டிலும் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் பொதுமக்கள். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-08-06 14:45 GMT

சிவகங்கையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான வெயில் கடந்த சில நாட்களாக அடித்து வந்த நிலையில் இன்று ஆடி மாதத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து நகரில் மழை செய்தது. இந்த மழை குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கோடையை காட்டிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Tags:    

Similar News