கள ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்த ஆணையை அமல்படுத்தக்கோரி போராட்டம்

தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இணைப்பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Update: 2022-02-01 16:43 GMT

கள ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்யும் ஆணை அமல்படுத்தவேண்டும் மாவட்ட அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கூட்டுறவு சங்க கள ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்யும் ஆணையை அமல்படுத்தக்கோரி ரேஷன் கடை பணியாளர்கள் இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இளையான்குடி கூட்டுறவு சங்க கால ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வினோத் ராஜா.  இவர் அப்பகுதியில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரை பணியிட மாற்றம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவு சங்கத்தினர் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் சமையல் செய்து நூதன போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து அவரது பணி இடமாற்றம் ஆணையை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் பணியிட மாற்ற ஆணையை அமல்படுத்தக்கோரி அதே இணைப்பதிவாளர் அலுவலத்தை முற்றுகையிட்டு சுமார் 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப வருகின்றனர். மேலும் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் இணைப்பதிவாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News