அமைச்சர் பிறந்தநாள்: கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தகவல் தொழில்நுட்ப பிரிவு
அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்தநாளை முன்னிட்டு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தகவல் தொழில்நுட்ப பிரிவினர்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் ராஜகண்ணப்பன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை தகவல் தொழில்நுட்பப் பிரிவினர்கள் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்
இன்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் சிவகங்கையில் உள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தாயாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்
முன்னதாக உற்சவ தெய்வங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சர்வ அலங்காரம் செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து அமைச்சர் பெயரில் அர்ச்சனைகள் செய்ய செய்து தகவல் தொழில் நுட்ப பிரிவினர்கள் வழிபாடு செய்தனர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஆயினும் கோவிலுக்குள் இருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை, முகக்கவசமும் அணியவில்லை.