சிவகங்கை ஸ்ரீ நானம்மாள் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள்

சிவகங்கை ஸ்ரீ நானம்மாள் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நேற்று இரவு நடைபெற்றது.

Update: 2021-08-06 02:14 GMT

நானம்மாள் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம். 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள அண்ணாமலை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கீழ்பாத்தி என்ற ஸ்ரீ நானம்மாள் சமேத ஸ்ரீ நானேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் ஆடி மாத உற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக பழமையான நானேஸ்வரர் நானம்மாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து மூலவர் நானேஸ்வரர் நானம்மாள் அம்மனுக்கு திருமஞ்சனம் பொடி மாவு கரைசல் சந்தனம் பஞ்சாமிர்தம் விபூதி பன்னீர் மஞ்சள் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனையடுத்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. உடன் சுவாமி அம்மனுக்கு உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டு பஞ்சமுக கற்பூர ஆராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News