சிவகங்கை: 1003 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள்

மாவட்டத்தில் இதுவரை, 1 லட்சத்து 33 ஆயிரத்து 341 பயனாளிகளுக்கு ரூ. 28.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

Update: 2021-07-30 08:51 GMT

சிவகங்கையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பாக 1003 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம் ரூ 15,34,250 மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தொழிலாளர் நலத்துறையின் சார்பாக, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில்  நலவாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

சிவகங்கை மாவட்டத்திலுள்ள 18 நலவாரியங்களின் கீழ்செயல்படும், 1003 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம் ரூ 15 லட்சத்து 34ஆயிரத்தில் 250  மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  மாவட்டத்தில் இதுவரை, 1 லட்சத்து 33 ஆயிரத்து 341 பயனாளிகளுக்கு ரூ28 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 247 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறைஉதவி ஆணையர் கோட்டீஸ்வரி, சட்டமன்ற உறுப்பினர், அதிமுக செந்தில்நாதன்,  சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாங்குடி ,சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர்,  காஞ்சிராங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News