திமுகவில் இணைந்த சிவகங்கை அதிமுக ஒன்றியக்குழுத்தலைவர் மற்றும் 3 உறுப்பினர்கள்
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவில் இணைந்த இரண்டாவது சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை ஒன்றிய சேர்மன் மற்றும் 3 கவுன்சிலர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றிய சேர்மனாக பதவி வகித்துவரும் அதிமுகவை சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களான வேல்முருகன்,லெட்சுமிசரவணன், தேமுதிகவை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் அதிமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவில் இணைந்த இரண்டாவது சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.