சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
கடைக்கு லைசன்ஸ் இல்லை காலாவதியான பொருள்கள் என்று கூறி கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்
சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், சாத்தரசன் கோட்டையில்உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் ஒருவர் இன்று சோதனைகளை மேற்கொண்டு கடைக்கு லைசன்ஸ் இல்லை நீங்கள் விற்கும் பொருட்கள் காலாவதியான பொருள்கள் என்று கூறி அங்குள்ள கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அவரை பிடித்து வைத்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி என தெரியவந்தது . அதனைத் தொடர்ந்து, சிவகங்கை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.