சிவகங்கை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் போலீசில் சரணடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், அண்ணா நகரை சேர்ந்தவர் சரத்குமார்(29). இவர் குடிபோதையில் நேற்றிரவு 11 மணி அளவில் ஒக்கூர் சந்தையில் நின்று கொண்டிருந்த கேசவன், ருத்திரன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம், அண்ணாநகரில் நின்று கொண்டிருந்த சரத்குமாரை, கேசவன் மற்றும் ருத்ரன் ஆகியோர் வாளால் வெட்டி கொலை செய்து விட்டு, மதகுபட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த இவர்களை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சரத்குமாரின் உடலை மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்