சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக 126 பேருக்கு கொரோனா

சிவகங்கை மாவட்டத்தில் புதியதாக 126 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 2 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2021-05-04 02:32 GMT

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 734 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில், சிவகங்கை மாவட்டத்தில் 155 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.  நேற்று மட்டும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News