சிவகங்கை அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தை மூட முடிவு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் செயல்படும் அம்மா உணவகத்தை மூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2021-07-18 07:42 GMT

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகம்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை கவுன்சிலர்கள் நெருக்கடியால் மூட ஊராட்சி ஊராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் மாதந்தோறும்  இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால் உணவகம் மூலம் ரூ. 60,000 மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

இதனால் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் கூடுதலாகக் செலவாகிறது. இந்த தொகையை பொது நிதியிலிருந்து எடுப்பதால் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அம்மா உணவகத்தை மூட ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி கூறுகையில், மற்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உணவகங்களை நகராட்சி, மாநகராட்சிகளே நடத்துகின்றன. ஆனால், இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு இல்லை. பொது நிதியிலிருந்து செலவழிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் அம்மா உணவகத்தை நடத்த முன்வரவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அம்மா உணவகத்தை நம்பி இருப்பவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.  எனேவ, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News