பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு குறித்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏராளமான பணிக்குச் செல்லும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பணியின் போது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் மாவட்ட அளவிலான புகார்கள், உள்ளூர் புகார்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விசாகா கமிட்டி குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.அதன் பின்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்