தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத சீமான்:தொலைபேசியில் முதல்வர் ஆறுதல்
உடல்நலக்குறைவால் இறந்த தந்தையின் உடலைப்பார்த்து கதறி அழுத சீமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் ஆறுதல் கூறினார்.
இறந்த தந்தையின் உடலை பார்த்து சீமான் கதறி அழுதார்.தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செபஸ்தியான் (எ) செந்தமிழன் (94) வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்து சீமான் கதறி அழுதார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். சீமானின் தகப்பனார் செந்தமிழன் இறுதி சடங்கு கொரானா ஊரடங்கு கட்டுபாட்டு காரணமாக உறவினர்களுடன் எளிமையாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.