ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தூக்கி எறியுங்கள் என சிவகங்கையில் சரத்குமார் உருக்கமாக பேசினார்.
சமக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நேசம்ஜோசப்பை ஆதரித்து சமக தலைவர் சரத்குமார் சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசும் போது தமிழகமக்கள் வாழ்வாதார அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் உயர்கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் என்ற அடிப்படையில் பயணிக்கிறோம். இலவசங்கள் எதற்காக தரவேண்டும், மக்களுக்கு பணம் கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவார்கள் என எண்ணுகின்றனர்.காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், பணத்தை தூக்கி எறியுங்கள், துச்சமாக மதியுங்கள். உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் கிடைக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் எதிலும் கிடைக்காது என்றார்.