சிவகங்கை அருேக மயானத்திற்கு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு: பாெதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர்கள் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டம்.

Update: 2021-09-01 12:15 GMT

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொதுமயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர்கள் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனி நபர்கள் அடைத்ததாலும், குடிதண்ணீர் ஊரணி ஆக்கிரமிப்பு செய்ததாலும், கிராம பொதுபாதையை முட்களை வெட்டி போட்டு அடைத்ததாலும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம் குருக்கத்தி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொது மயானத்திற்கு செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் குடிதண்ணீர் ஊரணி மற்றும் கிராம பொது பாதையை முட்செடிகளால் அடைத்ததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியூர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கிராம மக்கள் பொது சாலையை முட்களால் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News