காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் -ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை

பொதுமக்களிடையே காவல்துறையினர் பொறுமை காக்க வேண்டும் - ராமநாதபுரம் சரக டிஐஜி அறிவுரை.

Update: 2021-07-01 13:02 GMT

போலீசாருக்கு சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்களை ராமநாதபுரம் சரக டிஐஜி வழங்கினார்.சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் சானிடைசர் முககவசம்உள்ளிட்ட கொரோனா நிவாரன பொருட்கள் அடங்கிய தொகுப்பை ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன் வழங்கினார் . அதன் பின்னர் காவலர்கள் இடையே உரையாற்றும் போது,

சட்டத்தை நடைமுறைபடுத்தும் மிக பெரிய பணியினை நாம் செய்து வருகிறோம். மேலும் நாம் கனிவோடு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் நன்னடத்தை என்பது அவசியம் என்று கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தி்ல்குமார் கூடுதல் போலிஸ்சூப்பிரண்டு முரளிதரன் துனை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின் பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News