காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு, ஏராளமான காவலர்கள் ஆர்வமுடன் வாக்குப்பதிவு

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Update: 2021-03-30 09:30 GMT

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஏராளமான காவலர்கள் தங்களது வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

தேர்தல் வாக்குப்பதிவன்று காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களுடைய வாக்குகளை பதிவு செய்ய தபால் முறை வாக்குப்பதிவு நடத்தப்படுவது வழக்கம்.

இன்நிலையில் இன்று சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தபால் வாக்குப்பதிவானது சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அதிகாரியான முத்துக்கழுவன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டு தங்களின் வாக்குகளை தபால் மூலம் ஆர்வமுடன் பதிவு செய்தனர்.

Tags:    

Similar News