வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி போராட்டம்

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க போராட்டம்

Update: 2021-07-26 11:05 GMT

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க போராட்டம்

மானாமதுரையை அடுத்துள்ள ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருக்கு செளந்தரம் என்கிற பெண்ணுடன் திருமணமாகி ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் என்கிற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 31 ஆம் தேதி சவுதி அரேபிய நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு கம்பி கட்டும் வேலைக்காக சென்றுள்ளார். இரண்டு ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்துவந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி கட்டுமான பணியில் ஈடுபடும்போது சுவர் இடிந்துவிழுந்து அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ராஜேஸ்வரன் உயிரிழந்தது குறித்து கட்டுமான நிறுவனம் இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில் அங்கு உடன் பணிபுரியும்  அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் மனைவி செளந்திரத்திற்கு தொலைபேசி வழியாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி செளந்திரம் தனது குழந்தைகளுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

இந்நிலையில் 50 நாட்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பினர், ஆட்சியர் அலுவலகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News