கல்குறிச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட மாவட்ட ஆட்சியரிடம் மனு

நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்ட வாய்ப்பு பறிபோவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்

Update: 2021-10-11 08:27 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்த கல்குறிச்சி கிராம மக்கள்

கல்குறிச்சி ஊராட்சியை மானாமதுரை நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிடவேண்டும்  என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது கல்குறிச்சி ஊராட்சி.  இந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் முழு நேர தொழிலாக சர்க்கஸ் தொழிலில் குழந்தைகளுடன் ஈடுபட்டு வந்தனர். அரசு குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் கொண்டு வந்த பிறகு, குழந்தைகளை  அனைவரும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

இவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலை செய்து அதில் கிடைக்கும்  கூலியில் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர்.தற்போது கல்குறிச்சி ஊராட்சியை மானாமதுரை நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்ட வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும். எங்களுடைய குழந்தைகளின் படிப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். ஆகவே அரசு கல்குறிச்சி ஊராட்சியை  மானாமதுரை நகராட்சியுடன்  இணைப்பதைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தி பள்ளி குழந்தைகளுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

Tags:    

Similar News