சிவகங்கை மாவட்டத்தில் ஆக்சிஸன் வசதியுடன் கூடிய மேலும் 590 படுக்கைகள்

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டையில் கூடுதலாக ஆக்சிஸன் வசதியுடன் கூடிய மேலும் 590 படுக்கைகள் தயார் செய்யும் பணி தீவிரம்.

Update: 2021-05-11 07:48 GMT

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மற்றும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் மாவட்டத்தில் மேலும் 590 ஆக்சிஸன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவற்றில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகளும், காரைக்குடி அரசுமருத்துவமனையில் 300 படுக்கைகளும், தேவகோட்டை மருத்துவமனையில் 200 படுக்கைகளும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவில் நிறைவு பெற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News