அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாள்: தகவல் தொழில்நுட்ப பிரிவினர் அன்னதானம் வழங்கல்

சிவகங்கையில் மேலூர் ரோட்டில் உள்ள பாலர் விடுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

Update: 2021-07-31 13:16 GMT

சிவகங்கையில் ராஜகண்ணப்பன் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் ஊனமுற்றோர் மற்றும் பாலர் விடுதியில் உள்ளவர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கினர்.

போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சார்பில் ,  சிவகங்கையில் மேலூர் ரோட்டில் உள்ள பாலர் விடுதிகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, பனங்காடி ரோட்டில் உள்ள தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கான தாய் இல்லத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலக பொறுப்பாளர் சத்தியேந்திரன் , சிவகங்கை, கொட்டகுடி குமார், இலுப்பக்குடி ராமசிவக்குமார், கால்நடைத்துறை, சிவகங்கை .பாண்டியராஜன்,புதூர் சீனிவாசன்,மானமாதுரை காசி சிவராமன், சிவகங்கை செந்தில், முத்தரசன்,  குமரேசன், ரோஸ்நகர் பிரபு, வல்லாரேந்தல் பழனிக்குமார், வேம்பத்தூர் ராஜேஷ்கண்ணன், வேம்பத்தூர் சாண்டில், பெரியக்கண்ணனூர் பாண்டியராஜன்,வேளாங்கப்பட்டி கார்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்

Similar News