உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு 100% வெற்றி: அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியானது, 100 சதவீத இடங்களை கைப்பற்றும் என்று, அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-28 09:37 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், புதிய கூட்டரங்கை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்து பேசினார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கல்வித்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், எதிர்வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில், 100 சதவீத இடங்களை திமுகவும் , அதன் தோழமை கட்சிகள் கைப்பற்றும் என்றார். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வருகிற பட்ஜெட் கூட்ட தொடரில் கல்விக்காக கூடுதல் நிதியை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்குவார் என்றார்.

Tags:    

Similar News