தடையை மீறி மஞ்சுவிரட்டு; போலிஸ் குவிப்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் நற்கினி அம்மன் கோவில் திருவிழாவில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2021-07-23 07:48 GMT

தடையை மீறி அவிழ்த்துவிடப்படும் காளைகள்.

சிவகங்கை மாவட்டம், கல்லல் நற்கினி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு புரண்டி கம்மாய்குள் தடை மீறி மஞ்சு விரட்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவலறிந்த தேவகோட்டை டிஎஸ்பி., ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் கல்லல் வரும் வழித்தடங்களில் வாகனங்களில் அழைத்து வரப்படும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஆனாலும், செவரக்கோட்டை, புரண்டி,காரைக்குடி, கோவிலூர், கண்டரமாணிக்கம், சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து கால் நடையாகவே காளைகளை அழைத்துவந்து அவிழ்த்துவிட்டனர்.

சுமார் 150க்கும் மேற்ப்பட்ட காளைகள் புரண்டி கம்மாய்குள் அங்காங்கே அவிழ்த்து விடப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டை காண பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News