காளையார்கோவில் அருகே கடத்தப்பட்ட இளைஞர் கழுத்தறுத்து கொலை

பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-12-03 16:45 GMT

கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார்.

சிவகங்கை அருகே கீழ குலத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 24). இவர் 2019ஆம் ஆண்டு சிவகங்கை அருகே மாத்தூரை சேர்ந்த பிரசாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2020 ஜூலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனூரில் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பிரவீன்குமார் மற்றும் நண்பர்களை சிலர் கடத்திச் சென்றதாக, காளையார் கோவில் போலீசாருக்கு உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பிரவீன்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பழிக்குப்பழியாக கொலை நடந்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News