சிவகங்கையில் கருணாஸ் எம்எல்ஏ., கைது

Update: 2021-03-25 12:15 GMT

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் சிவகங்கையில் கைது செய்யப்பட்டார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் ,10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கண்டித்து தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் மற்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமியை கண்டித்து திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாக திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சிவகங்கையில் தனது நண்பர் இல்லத்தில் இருந்து திருப்பத்தூர் கிளம்பும் போது சிவகங்கை போலீசார் கருணாசை அவரது நண்பர் வீட்டிலேயே கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News