சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-01-16 06:07 GMT

பைல் படம்.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது . எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெற்று வந்த 41 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 464 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரானா தொற்றுக்கு இறப்பு எதுவும் இல்லை என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News