சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் திறப்பு
பி.எம். கேர் திட்டத்தின் கீழ், சிவகங்கை அரசு மருத்துவமனையில், பிராணவாயு உற்பத்தி மையத்தை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில், பாரத பிரதமரின் பி.எம். கேர் திட்டத்தின் கீழ், பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இரண்டு மையங்களை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கே ஆர் பெரிய கருப்பன், இன்று துவக்கி வைத்தார்.
இந்த பிராணவாயு உற்பத்தி மையத்தில், ஒரு நிமிடத்தில் 15 ஆயிரம் லிட்டர் பிராணவாயு உற்பத்தி செய்யலாம். அது கொரானா வைரஸ் பாதிப்பு மட்டும் அல்ல, வேறு சுவாச கோளாறு காரணமாக வரும் நோயாளிகளுக்கும் இந்த பிராணவாயு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.