சிவகங்கை மாவட்டத்தில் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்
மாவட்டம் முழுவதிலும் சுமார் 100 ஆட்டோக்களில் சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தமிழ்நாட்டில் முதல் முயற்சி ஆகும்
சிவகங்கை மாவட்டத்தில் ஆட்டோக்களில் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
தமிழகமெங்கும் இன்று ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களுக்கு தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில், முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் போன்று வர முடியாதவர்களுக்கு ஆட்டோக்களில் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலும் சுமார் 100 ஆட்டோக்களில் சென்று தடுப்பூசி செலுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தமிழ்நாட்டில் முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.