சிவகங்கை பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் வருகின்றனர்.

Update: 2022-02-01 07:02 GMT

சிவகங்கை - மதுரை பைபாஸ் ரோட்டில் கடும் பனிப்பாெழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் வருகின்றனர்.

தமிழகத்தில் மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம். தற்போது மார்கழி மாதம் முடிந்தும் பனிப்பொழிவுகள் இன்னும் தொடர்ந்து வண்ணம் உள்ளது.

சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனி இயல்பை விட அதிகரித்து காணப்பட்டது. சிவகங்கை மதுரை பைபாஸ் ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.

மேலும் இதேபோன்று சிவகங்கை காளையார்கோவில் படமாத்தூர் மதகுபட்டி சாமியார் பேட்டி நாட்டரசன் கோட்டை கல்லல் உள்ளிட்ட இப்பகுதி விவசாய நிலங்களில் மேல்பரப்பில் பணிகள் விழுவதால் விவசாய பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் மூடுபனி இயல்பை விட அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பனிப்பொழிவால் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்

Tags:    

Similar News