சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 2 வது நாளாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த இடி, மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கடந்த சில வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், சிவகங்கை, காளையார்கோவில், படமாத்தூர், மதகுபட்டி, நாட்டரசன்கோட்டை, கொல்லங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் கன மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சாலையில் வெள்ளம் போல் புரண்டு ஓடுவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.