சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றி மற்றும் பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக கொரோனா விழிப்புணர்வு குறித்தும் கொரோனா காலத்தில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார். பின்னர், 2015 ஆண்டை சேர்ந்த 51 மாணவர்கள் 49 மாணவிகள் உட்பட 100 பேருக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல், துணை முதல்வர் ஷர்மிளா திலகவதி மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.