பொன்விழா காணும் சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா
தியாகிகள் மற்றும் ராணுவ பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு கதர் ஆடைகள் வழங்கப்பட்டது
பொன்விழா காணும் சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா
பொன்விழா கண்ட சிவகங்கை அரிமா சங்கத்தின் சார்பாக காந்தி ஜெயந்தி விழா, சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின், தியாகிகள் மற்றும் ராணுவ பணியாற்றி ஓய்வு பெற்ற நபர்களுக்கு கதர் ஆடைகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
விழாவில், சிவகங்கை லயன்ஸ் சங்க தலைவர் முத்துராஜா, செயலாளர் ஜெயச்சந்திரன், மூத்த உறுப்பினர் கேப்டன் சரவணன், முன்னாள் தலைவர்கள் ராம் பிரபாகர், கோவிந்தன், சோமசுந்தரம், ரவிக்குமார், அரிமா உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.