சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்

சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி- விவசாய சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

Update: 2021-08-09 10:02 GMT

சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி போராட்டம்

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 அவசர சட்ட சட்ட மசோதா மின்வாரிய திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட அவசர சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரி போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் இருந்து மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பட்டன. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News