மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்டுவதைத் தடுக்கக் கோரி் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க கோரி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

Update: 2021-07-26 11:31 GMT

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கைகளைத் தடுக்க கோரி சிவகங்கையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் கோபால் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கர்நாடாகா மேகதாட்டில் அணை கட்டு கட்டுவதை தடுக்க கோரியும், தமிழகத்தின் ஆற்றுநீர் உரிமையை பறிப்பதை தடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News