காரைக்குடி தனியார் மூலிகை பண்ணையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா

பல்வேறு மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்

Update: 2021-10-08 05:57 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள தனியார் மூலிகைப் பண்ணையை பார்வையிட்ட புதுக்கோட்டை குடுமியான்மலை  வேளாண் கல்லூரி மாணவர்கள்

காரைக்குடி சொனா வானா மூலிகை பண்ணையில் இரண்டாம் ஆண்டு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலாநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஆவுடபொய்கை என்ற இடத்தில் சொனா வனா மூலிகை பண்ணை உள்ளது இந்த மூலிகை பண்ணையை சித்த மருத்துவர் சொக்கலிங்கம் மற்றும் அவரது மகன்கள் சித்த மருத்துவர். ரவிச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர்  48 ஏக்கரில்  மூலிகை பண்ணை அமைத்து பல்வேறு  மருத்துவ குணமுள்ள ஏராளமான மூலிகைச் செடிகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த மூலிகைப் பண்ணையை, புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும்  ஆசிரியர்கள் உள்பட  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கல்வி சுற்றுலா திட்டத்தில் இந்த மூலிகை பண்ணைக்கு வந்திருந்தனர்.

அனைவருக்கும், சித்தமருத்துவர். சொக்கலிங்கம், மூலிகைச் செடிகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். அதன் பின்பு மாணவ மாணவியர் கூறும்பொழுது, தாங்கள் இதுவரை பெயரை மட்டும் கேள்விப்பட்டிருந்த மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை இன்று நேரில் பார்த்தோம். பல்வேறு வகை மூலிகை செடிகளை இன்று நேரில் பார்த்து தெரிந்து கொண்டது தங்களது வேளாண் படிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்

Tags:    

Similar News