அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது: ஹெச்.ராஜா

அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது - சிவகங்கையில் H.ராஜா பேட்டி

Update: 2021-05-05 08:53 GMT

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை கண்டித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த H.ராஜா, 100 நாட்களுக்கு திமுக அரசை விமர்சிக்க போவது இல்லை என்றவர், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நேற்றை மதுரவயல் சம்பவத்தில் பார்த்துவிட்டோம் என்றும், திமுகவும் - ரவுடியிசமும் synonyms இதனை ஸ்டாலின் போக்க வேண்டும் என்று H.ராஜா கேட்டுக்கொண்டார். அதிமுக பிளவுபட்டதால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது, பொருளாதார மோசடி பேர்வழிகளான சீனியர், ஜூனியர் சிதம்பரம் அரசியலில் இருக்கும் வரை நான் அரசியலில் இருப்பேன் என சூளுரைத்த ஹெச் ராஜா,

சிதம்பரம் பேசாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் அதற்கான எதிர்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும் என H.ராஜா எச்சரித்தார்.

Tags:    

Similar News