அரசு கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகள் விற்பனை குறைவு: வியாபாரிகள் வேதனை

கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

Update: 2021-09-10 11:19 GMT

வீதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

நாடு முழுவதும் இன்று விநாயக சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை பாெது இடங்களில் வைத்து வழிபட கூடாது என்றும் மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் கடந்த 2 நாட்களாக விநாயகர் சிலைகள் விற்பனை குறைந்துள்ளதாகவும், அதனை சார்ந்த பொருட்களும் விற்பனை ஆகாததால் முதல் இழந்து வேதனையுடன் புலம்புகின்றனர் வியாபாரிகள்.

Tags:    

Similar News