தொடர் மழை எதிரொலி: சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம்
தொடர்ந்து மழை எதிரொலியாக, சிவகங்கை மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், முத்துப்பட்டி, ஒக்கூர், சிவகங்கை, வாணியங்குடி, சுந்தர நடப்பு, கீழக்கண்டனி, சாத்தரசன் கோட்டை உள்ளிட்ட கிராமங்களில், விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் உழுது, நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்து, நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள், தற்போது சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.