பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம்
சிவகங்கையில், தீபாவளியால் பட்டாசு குப்பைகள் அதிகம் சேர்ந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள் அவற்றை அகற்றினர்.
தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட நேரத்தில் பலரும் பட்டாசுகளை வெடித்தனர். என்றாலும், காற்று மாசால் டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்கள் பாதிக்கப்பட்டன.
சிவகங்கையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உற்சாகமாக பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடினர். அனைத்து இடங்களிலும் வெடித்த பட்டாசுகளின் குப்பை, வீதிகள் முழுவதும் நிறைந்திருந்தது. இதனை, சிவகங்கை நகர் துப்புரவு பணியாளர்கள், எவ்வித எதிர்பார்ப்புமின்றி இன்று முழுவீச்சில் அகற்றினர். அன்றாட பணிகளுக்கு இடையே கூடுதல் பணிச்ச்ய்மையாக, பட்டாசு குப்பைகளை சலிக்காமல் அகற்றி, நகரை சுத்தமாக்கி வரும் தூய்மைப் பணியாளர்களை பலரும் பாராட்டினர்.