சிவகங்கை-கொரானா பரவல் -ஆய்வு கூட்டம்-ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தீவிரமாக பரவும் நேரத்தில் ஆய்வு கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-26 05:01 GMT

ஆய்வுக்கூட்டம் நடத்த எதிர்ப்பு - ஊரகவளர்ச்சித்துறை -சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்று தீவிரமாக பரவி வரும் நேரத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமைகள் தொடர்ந்து துறைரீதியான ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கு ஊரக வளர்ச்சித் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு 200 ஆக அதிகரித்துவரும் இந்நிலையில் திருப்பத்தூர் சிங்கம்புணரி எஸ் புதூர் சாக்கோட்டை கல்லல் ஒன்றியத்துக்கான ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது இதில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர் ஏற்கனவே மே 15 ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதுபோன்று தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரானா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். இந்நிலையில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் தேவையின்றி கூட்டத்தை நடத்துகின்றனர். தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தினால் கொரானா தொற்று கூடுதலாக பரவும் அபாயம் உள்ளதால் இதுபோன்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News