சிவகங்கையில் வாக்கு எண்ணிக்கை மய்யத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை

சிவகங்கையில் வாக்கு எண்ணும் மய்யத்திற்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது-.

Update: 2021-04-29 17:15 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மதியத்திற்கு செல்வதற்கு கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆகவே சிவகங்கை தொகுதிகளுக்கு நடைபெற்ற முகாம் களில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் பரிசோதனை செய்துகொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் சிவகங்கை தொகுதிகளின் வாக்கு எண்ணும் அலுவலர்கள்,

முகவர்களுக்கு மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் சோதனை மாதிரி எடுக்கப்பட்டது. மேலும் ஒரு சிலர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று முகாமை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News