கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்: பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்

சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம்

Update: 2021-08-01 07:32 GMT

கொரோனா விழிப்புணர்வு முகாம், பேருந்தில் ஏறி பயனிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கிய ஆட்சியர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கொரோனா 3 ஆம் அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வார காலம்(1.8.2021- 7.8.2021) பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.    சிவகங்கை பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் இன்று கொரோனா விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மதுகுசூதன் ரெட்டி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதையொட்டி, ஊழியர்கள் அனைவரும்   கொரோனா  விழிப்புணர்வு உறுதி ஏற்றுகொண்டனர். பின்னர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை, அங்கு நின்ற பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வழங்கியதுடன், பயணிகளை கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்தினார். மேலும், பேருந்திற்காக காத்திருந்த பயனிகளுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

Tags:    

Similar News