குழந்தை இல்லாத விரக்தி: கணவன் விஷம் குடித்து தற்கொலை

வாகுடி கிராமத்தில் -25 ஆண்டுகளாக -குழந்தை இல்லாமல் தவித்த தந்தை- விஷம் குடித்து தற்கொலை.

Update: 2021-08-09 14:36 GMT

வாகுடி கிராமத்தில் 25 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த தந்தை விஷம் குடித்து தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியம். இவருக்கும் வள்ளி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாக்கியத்திற்கும் வள்ளிக்கும் 25 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இதனால் மனவேதனையில் இருந்த பாக்கியம் கடந்த 3ஆம் தேதி வாகுடி கண்மாய் கரையில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிய பாக்கியத்தை உறவினர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று பாக்கியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News