வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-21 04:03 GMT

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்.

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அலுவலகம்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மூன்றுமாத தொகையாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 600 ரூபாயும், +2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 750ரூபாயும், பட்டதாரி முதுகலை பட்டதாரிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. சுமார் பத்தாண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் SC/ST 45 வயதுக்கு மிகாமலும் மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்திருக்க வேண்டும். பிற அலுவலகத்தில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை பெற இயலாது.

மார்ச் 2021 முதல் 2021 வரை காலாண்டுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய பயனர்களுக்கும், தற்போது அரசு வழங்கிய சிறப்புச்சலுகை நடப்பு காலத்தில் ஜனவரி 1-2022 முதல் மார்ச் 31 -2022 வரை புதிய ஒரு சுய உறுதிமொழி அவன் அத்துடன் தற்போதைய செய்தி வரை குறிப்புடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தகத்தை வைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கிய உதவித்தொகை பெறலாம்.

உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்வி சான்றிதழ் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News